நாட்டின் நான்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 14,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர், இதில் சபா மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் துறை அமைச்சர், டத்தோ ஆர்மிசான் முகமட் அலி தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 27) நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்படடவர்களின் எண்ணிக்கை சுமார் 4,569 குடும்பங்களை சேர்ந்த 14,012 பேராக இருந்தது, இதில் 13,000க்கும் அதிகமானோர் சபாவைச் சேர்ந்தவர்கள் என்றும், தற்போது ஜோகூர், பகாங், திரெங்கானு மற்றும் சபாவில் உள்ள 73 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் சபா-சரவாக் விவகாரங்கள் மற்றும் சிறப்புப் பணிகள் அமைச்சருமான அவர் கூறினார்.
இருப்பினும் வெள்ளத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஆனால் மையங்களுக்குச் செல்லாதவர்கள் இந்த எண்ணிக்கையில் இல்லை” என்று, இன்று சனிக்கிழமை (ஜனவரி 28) சபாவின் வடக்கு கோத்தா மருது மாவட்டத்தில் உள்ள ஒரு வெள்ளப் பாதுகாப்பு மையத்தைப் பார்வையிட்ட பிறகு, அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.