வரும் மார்ச் மாதம் புதிய பள்ளி அமர்வு தொடங்கும் முன்னர் அனைத்து மாநிலங்களிலும் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கப்படும் என்று கல்வி அமைச்சகம் (MOE) உறுதியளித்துள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான முதல் படியாக, சரவாக்கில் தேவைப்படும் 3,000 ஆசிரியர்களில் 50 விழுக்காட்டினர் மார்ச் மாதத்திற்கு முன் நியமிக்கப்படுவார்கள் என்று அவரது குழு முன்பு அறிவித்ததாக கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடெக் கூறினார்.
“அதே போல் மற்ற மாநிலங்களிலும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது, ஆனால் சரவாக்குடன் ஒப்பிடும்போது ஏனைய மாநிலங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை விகிதம் குறைவாகவே உள்ளது, எனவே, சரவாக்கில் உள்ள பிரச்சனையை அமைச்சகம் முதலில் தீர்க்கும்” என்றார்.