இந்திய போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் முதலாளி மலேசியாவின் தமிழ் திரைப்பட விநியோகிஸ்தரா?

கோலாலம்பூர்:

டந்த சனிக்கிழமை இந்தியாவில் கைது செய்யப்பட்ட ‘இந்திய போதைப் பொருள் மன்னன் ஜாபார் சாதிக்கின்’ மூளையாக மலேசியர் ஒருவர்தான் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, மலேசிய காவல்துறைக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

யூடியூப்பில் வெளியான ஒரு நேர்காணலின் மூலம், இந்த போதைப்பொருளு கடத்தலுக்கு மலேசியாவிலுள்ள டத்தோ பட்டம் கொண்ட ஒரு தமிழ் திரைப்பட விநியோகிஸ்தருக்கும் தொடர்புள்ளதாக அந்த செய்தி போர்டல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் என்று அழைக்கப்படும் நபர் தொடர்பில், மலேசியாவில் போதைப்பொருள் கடத்தல் பற்றிய எந்த தகவலிலும் இல்லை எனக் கண்டறியப்பட்டதாக தேசிய போலீஸ் படை தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJN) தரவுத்தளத்தின் மறுஆய்வின் படி, இது வரை, நாட்டில் எந்த போதைப்பொருள் கடத்தல் தகவலிலும் இந்தப் பெயர் இடம் பெறவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here