மூத்த வழக்கறிஞர் டத்தோஶ்ரீ கோபால் ஶ்ரீ ராம் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

கோலாலம்பூர்: தனது 79ஆவது வயதில் இன்று காலமான மூத்த துணை அரசு வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராமின் குடும்பத்தினருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த ஸ்ரீராமின் குடும்பத்தின் விவகாரங்கள் எளிதாக்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் துக்கத்தின் தருணத்தில் குடும்பம் வலுவாகவும் நெகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்றும் அன்வார் பிரார்த்தனை செய்தார்.

மறைந்த டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீ ராமின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு இரங்கல். அவரது குடும்பத்தின் விவகாரங்கள் எளிதாகி, குடும்பம் தங்கள் துயரத்தின் தருணத்தில் வலுவாக இருக்குமாறு  பிரதமர் தனது ட்விட்டரில் எழுதினார்.

கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியின் மரணச் செய்தியை துணை  அரசு வழக்கறிஞர் முகமட் முஸ்தபா பி. குனியாலம் இன்று பெர்னாமாவுக்கு உறுதிப்படுத்தினார் மேலும் அவர் இன்று மதியம் 12.15 மணியளவில் இங்குள்ள தனியார் மருத்துவமனையில் இறந்தார் என்று கூறினார். நுரையீரல் தொற்று காரணமாக ஸ்ரீராம் கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here