சரவாக்கின் கூச்சிங், சிரியான், சமாராஹான், சிபு, மூகா மற்றும் கபிட் (Song and Kapit) ஆகிய பகுதிகளில் நாளை வரை தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று காலை 6.45 மணிக்கு வெளியிடப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பில், பகாங் (குவாந்தான், பெக்கான் மற்றும் ரோம்பின் உள்ளிட்டவை), ஜோகூர் (மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி), சரவாக் (ஸ்ரீ அமான், பேத்தோங், சரிகேய் மற்றும் பிந்துலு) ஆகிய இடங்களில் நாளை வரை தொடர் மழை பெய்யும் என அது எதிர்வுகூறியுள்ளது.
இதற்கிடையில், கூடாட், சபாவில் இன்று தொடர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.