எம்ஏசிசி பெர்சத்துவின் கணக்குகளை விடுவிக்க வேண்டும் என்று முஹிடின் கோரிக்கை

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (எம்ஏசிசி) பெர்சத்து அதிகாரபூர்வ கடிதம் எழுதி அதன் கணக்குகளை விடுவிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.

இங்கு நடந்த செய்தியாளர் கூட்டத்தில், முஹிடின், பெர்சத்துவின் கணக்குகளில் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் அல்லது அதிகார துஷ்பிரயோகம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றால், MACC உடனடியாக முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

பெர்சத்துவின் நிர்வாகம் சீராக நடைபெறுவதற்கும், எங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கும் இது முக்கியமானது என்று பெரிகாத்தான் நேஷனல் தலைவரும்  முன்னாள் பிரதமரான அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here