சுங்கை லெபாமில் உள்ள RM3.62 மில்லியன் மதிப்புள்ள 80,000 லிட்டர் டீசல் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு கும்பலை மலேசிய கடல்சார் அமலாக்க பிரிவினர் (MMEA) நேற்று இரவு கைது செய்ததாக ஜோகூர் MMEA இயக்குனர் முதல் அட்மிரல் நூருல் ஹிசாம் ஜகாரியா தெரிவித்தார்.
இரவு 10.05 மணியளவில் சுங்கை லெபாம் கடற்பரப்பில் எண்ணெய் டேங்கர் இருப்பதை MMEA ரோந்துப் படகினர் கண்டறிந்தனர்.
30 நிமிடங்களுக்குப் பிறகு, இரண்டு இந்தோனேசியர்கள் மற்றும் லோரி ஓட்டுநர்கள் என்று நம்பப்படும் 19 மற்றும் 60 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்கள் உட்பட பத்து பணியாளர்களைக் கைது செய்ததாக அவர் கூறினார்.
“தான்சானியாவின் சான்சிபாரில் பதிவுசெய்யப்பட்ட கப்பல், எண்ணெயை மாற்றுவதாக நம்பப்படுகிறது.
மேலும், இந்தக் கும்பலிடமிருந்து இரண்டு டேங்கர் லோரிகள், ஒரு பெரோடுவா பெஸ்ஸா மற்றும் எண்ணெய் பம்புகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும், குறித்த கப்பல் மலேசிய கடற்பரப்பில் சட்டவிரோதமாக நங்கூரமிட்டதற்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் தஞ்சோங் செடிலி கடல்சார் மண்டல அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று நூருல் ஹிசாம் கூறினார்.