கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரு மூதாட்டியை கொலை செய்ததாக, வேலையில்லாத ஆடவர் மீது மாவட்ட நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ பிரச்சா நந்தினி பாலபேதா முன்னிலையில், அவருக்கு எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு, அதைப் புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக ஷரீபுடின் அர்ஷாத், 57, என்ற சந்தேக நபர் தலையசைத்தார், ஆனால் கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் இருப்பதால் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரையுள்ள காலப்பகுதியில், கம்போங் டுரியான் புருங்கில் உள்ள ஒரு வீட்டில் 79 வயதான பாத்திமா சலேயைக் கொன்றதாக ஷரீபுடின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், இது கட்டாய மரண தண்டனையை வழங்குகிறது.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை, வழக்கை மீண்டும் செவிமடுப்பதற்கு மார்ச் 12 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.
அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ். ஆர்த்தினியால் வழக்குத் தொடரப்பட்டது, குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் எவரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.