ஞாயிற்றுக்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு சரவாக்கில் தொடர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று நண்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட எச்சரிக்கையில் புக்கிட் மாபோங் மற்றும் காபிட்டின் பெலாகா பகுதிகளைஉட்படுத்திய பகுதிகளிலும், பிந்துலு; மிரி மற்றும் லிம்பாங் ஆகிய பகுதிகளிலும் தொடர்மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த பகுதிகளில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.