புத்ராஜெயா: Precinct 5 பகுதியில் உள்ள குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் தனது காரை பழுதுபார்த்துக்கொண்டிருந்தபோது, எஹைலிங் டிரைவர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
புத்ராஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் A.Asmadi Abdul Aziz கூறுகையில், பாதிக்கப்பட்ட முகமது அசிம் முகமட் சனுசி 29, வெள்ளிக்கிழமை (பிப். 17) நண்பகல் வேளையில் காரின் என்ஜின் ஆயிலை மாற்றி கொண்டிருந்தபோது கார் அவர் மீது ஏறியது.
பாதிக்கப்பட்டவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று அவர் வெள்ளிக்கிழமை தொடர்பு கொண்டபோது கூறினார். மேலும் சோதனைகளில் குற்றவியல் கூறுகள் எதுவும் இல்லை என்று கூறினார். பாதிக்கப்பட்டவர் புத்ராஜெயா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார்.