வேன் மற்றும் லோரியை உட்படுத்திய விபத்தில் சிங்கப்பூரியர் ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

நேற்றுக்காலை ஜோகூரின் ஜாலான் மெர்சிங்-ஜெமாலுவாங்கின் 20 ஆவது கிலோமீட்டரில், வேன் மற்றும் லோரியை உட்படுத்திய விபத்தில், சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர் இறந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் முகமட் உமர் இஸ்மாயில், 57, என அடையாளம் காணப்பட்டது, மேலும் முகமட் ஷாஷ் முகமட் சைட், 60, என்பவர் பலத்த காயமடைந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் காலை 11.53 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும், உடனே தீயணைப்பு மீட்பு டெண்டர் மற்றும் ஒன்பது பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்றும் மெர்சிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தளபதி, முகமட் ஜைனுடின் அகமட் கூறினார்.

விபத்து நடந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், அங்குனொஒரு நிசான் வேனும் 10 டன் HINO லோரியும் மோதியதைக் கண்டறிந்தனர். இந்த விபத்தில் லோரி ஓட்டுநரான முகமட் ஃபாஸ்லி பஹ்ரி, 48, என்பவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, ”என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

வேனில் சிக்கிய இருவரையும் மீட்க சிறப்பு மீட்பு கருவிகள் மூலம் வெளியே மீட்டதாகவும், அதில் முகமட் உமர் இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது, காயமடைந்தவர் மெர்சிங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மேலும் சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர் என அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here