கடத்தப்படவிருந்த 1,360 கிலோ மானிய விலை சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் கிளாந்தான் KPDN உறுப்பினர்களால் பறிமுதல்

கோத்தா குபாங் லாபு, வகாஃப் பாருவில் உள்ள ஒரு வளாகத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பல்நோக்கு வாகனத்தில், அண்டை நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த 1,360 கிலோ சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் நிரப்பப்பட்டிருந்ததை கிளாந்தான் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) கைப்பற்றியது.

கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் இந்த நடவடிக்கை, நேற்று நண்பகல் 12.10 மணியளவில் மூலம் மேற்கொள்ளப்பட்டது என்று, கிளாந்தான் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சக இயக்குனர், அஸ்மான் இஸ்மாயில் கூறினார்.

உளவுத்துறையின் தகவலின் பேரில், பணியில் இருந்த உறுப்பினர்கள் குழு கோட்டா பாருவின் திசையில் இருந்து தும்பட் நோக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் ஓட்டிச் செல்லப்பட்ட MPV வாகனத்தை பின்தொடர்ந்தனர்.

தான் பின்தொடர்வதை உணர்ந்த சந்தேக நபர், தனது வாகனத்தை விரைவுபடுத்தினார், “சந்தேக நபர் ஓட்டி வந்த MPV, அவர் தப்பிக்க முயன்றபோது ஒரு வளாகத்தின் முன் உள்ள சாலைத் தடையில் சிக்கியது. அதன் பிறகு சந்தேக நபர் அந்த வாகனத்தில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார் என்று கூறினார்.

“குறித்த வாகனத்தை ஆய்வு செய்ததில் அதில் 1,360 கிலோகிராம் மானிய விலை சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் அடங்கிய பல பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here