இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 10) நண்பகல் நிலவரப்படி, ஜோகூரிலுள்ள 173 தற்காலிக நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 44,934 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர், இந்த எண்ணிக்கை இன்று காலை, 45,218 பேராக இருந்தது. இதனடிப்படையில் ஜோகூரில் வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிது குறைந்துள்ளது என்று, மாநில பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.
மேலும் நண்பகல் நிலவரப்படி, குளுவாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர், அதே நேரத்தில் அங்கு ஒரு நிவாரண மையம் மூடப்பட்டது.
இருப்பினும் தற்போது மாநிலம் முழுவதும் 173 தற்காலிக நிவாரண மையங்கள் உள்ளன, இதில் பத்து பகாட்டில் மட்டும் 111 நிவாரண மையங்களில் 38,135 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
“இதைத் தொடர்ந்து மூவார் (3,432), தாங்காக் (2,073), சிகாமாட் (1,019), மெர்சிங் (219) மற்றும் குளுவாங்கில் 56 பெரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அடு தெரிவித்துள்ளது.