கோலாலம்பூர்: 232.5 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கேட்டதற்காக நான்கு ஊழல் குற்றச்சாட்டுகளையும், RM195 மில்லியன் பணமோசடி செய்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்ட டான்ஸ்ரீ முஹிடின் யாசின் 2 மில்லியன் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமரின் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு நீதிபதி அசுரா அல்வி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை மே 26ஆம் தேதி குறிப்பிட நீதிபதி அசுரா நிர்ணயித்தார். முன்னதாக, முஹிடின் தான் குற்றமற்றவர் என்று கூறி ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் விசாரணையை கோரினார்.
Solicitor-General டத்தோ அஹ்மட் டெரிருடின் முகமட் சாலே, இரண்டு ஜாமீன்களுடன் ரிம2 மில்லியன் ஜாமீன் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன் முன்மொழிந்தார். முஹிடின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டத்தோ கே.குமரேந்திரன், ஜாமீன் தொகை மற்றும் கூடுதல் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.
அரசு வழக்கறிஞர்கள் டத்தோ ஃபரிட்ஸ் கோஹிம் அப்துல்லா, டத்தோ வான் ஷஹாருடின் வான் லடின், அஹ்மத் அக்ரம் காரிப், நோராலிஸ் மாட், நோர் அஸ்மா அகமது, ரசிதா முர்னி ஆஸ்மி, முஹம்மது அஸ்ரப் முகமது தாஹிர், கலைவாணி அண்ணாதுரை ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.
முஹிடின் சார்பில் வழக்கறிஞர்கள் டத்தோ ரோஸ்லி டஹ்லான், டத்தோ தகியுதீன் ஹாசன், சேத்தன் ஜெத்வானி, தேவ் குமரேந்திரன், முகமட் இசா முகமட் பாசீர், தே சீ கூன் மற்றும் வர்ஷா செல்வி ஆகியோரும் ஆஜராகினர்.