ஈக்வடார் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

ஈக்வடாரின் கடற்கரை மாகாணமான கயாஸ் மாகாணத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த மாகாணத்தின் பலோ நகரில் இருந்து 29 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்தன. இந்த நிலநடுக்கத்தால் முதற்கட்டமாக 4 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 12 அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களை மீட்கும்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here