சம்பளம் வழங்கவில்லை; பதிலாக 5 புரொஜெக்டர்களை திருடிய டியூஷன் ஆசிரியர் கைது..!

கம்போங் பாரு அம்பாங்கில் உள்ள ஜாலான் மெர்டேக்கா அம்பாங்கில் உள்ள டியூஷன் சென்டரில் பகுதி நேர ஆசிரியராகப் பணியாற்றிய ஒருவருக்கு சம்பளம் வழங்கப்படாததால், அவர் RM13,000 மதிப்புள்ள ஐந்து புரொஜெக்டர்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், 35 வயதுடைய அந்த ஆசிரியர் நேற்று அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நேற்று காலை 10 மணியளவில் புரொஜெக்டர் தொலைந்து போனது குறித்து டியூஷன் சென்டர் ஊழியர்கள் தங்கள் அதிபருக்கு தகவல் கொடுத்ததுடன், சந்தேக நபர் அதை செய்திருக்கலாம் எனவும் சந்தேகம் அடைந்தனர்.

உண்மையில், சந்தேக நபர் சம்பந்தப்பட்ட பொருட்களைத் திருடியதை அப்போது வகுப்பில் இருந்த பல மாணவர்கள் கவனித்தனர்.

ஒரு மாத காலம் மட்டுமே குறித்த டியூஷன் சென்டரில் கற்பித்து வந்த சந்தேக நபர், தனக்கு கிடைக்கவேண்டிய சுமார் RM3,000 சம்பளம் கிடைக்காததால், தான் இந்தச் செயலைச் செய்துள்ளார்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து அவர் திருடியதாக நம்பப்படும் பொருட்களும் மீட்கப்பட்டன. மேலும் அவரின் கடந்த கால குற்றப் பதிவுகளைச் சரிபார்த்ததில், சந்தேகநபருக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

“தண்டனைச் சட்டத்தின் 380வது பிரிவின்படி மேலதிக விசாரணைகள் நடத்தப்படுகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here