நேற்று, இங்குள்ள சிம்பாங் எம்பாட், ஜாலான் கம்போங் தம்புன் துலாங் என்ற இடத்தில், துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக நம்பப்படும் மூன்று புதின்ம வயது சிறுவர்கள் அலைந்து திரிந்த நிலையில், பொதுமக்களால் மீட்கப்பட்டனர்.
இரவு 11.55 மணியளவில், அந்த வீதியூடாகச் சென்ற பொதுமக்கள் 13 முதல் 16 வயதுடைய சிறுவர்களை கண்டுள்ளனர். அதில் இருவர் மாற்றுத்திறனாளிகள் (OKU) என்று கங்கார் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் யுஷரிபுடின் முகமட் யுவாப் கூறினார்.
“முதற்கட்ட விசாரணையின் முடிவுகளில், மாற்றுத்திறனாளிகள் இருவரின் கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது, அதே சமயம் மற்றைய சிறுவன் சங்கிலியால் பிணைக்கப்படவில்லை.
“பாதிக்கப்பட்ட இந்த மூன்று பேரும் 14 முதல் 16 வயதுக்குட்பட்ட உடன்பிறந்தவர்கள் என்றும் அவர்களில் இருவருக்கு OKU கார்டுகள் இருப்பதாகவும் நாங்கள் நம்புகிறோம்.
“பாதிக்கப்பட்டவர்களுடன் அவரது தாய் வசிக்கவில்லை என்றும், குறித்த சிறுவர்கள் அவர்களது தாயால் வீட்டில் வைத்து பூட்டி, சங்கிலியால் பிணைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
அவ்வாறு வீட்டில் நடத்தப்படுவதைத் தாங்க முடியாமல் இந்த வாலிபர்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டனர் என்று போலீசார் நம்புவதாகவும் அவர் கூறினார்.
“அதைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவுவதற்காக, பாதிக்கப்பட்டவர்களின் தாயார் 46 மாற்று ஒரு ஆண், ஆகியோரை கைது செய்துள்ளோம். 31 வயதுடைய அந்த ஆணுக்கும் சிறுவர்களின் தாயாருக்கும் உள்ள உறவுமுறை பற்றி இதுவரை எதுவும் தெரியவில்லை.
“குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (a) இன் படி, வழக்கின் விசாரணையில் உதவுவதற்காக இருவரும் இன்று தொடங்கி மார்ச் 31 வரை ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இப்போது கங்காரில் உள்ள துவாங்கு பௌசியா மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், சிகிச்சை முடிந்த பிறகு, மூன்று சிறுவர்களும் பெர்லிஸ் மாநில சமூக நலத் துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.