ஈப்போ, சித்தியவானில் உள்ள தாமான் டிண்டிங்கில் அவர்களது வீடு தீப்பிடித்ததில் மூன்று பேர் கொண்ட குடும்பம் ஒன்று காயமடைந்ததாக, பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி, கைருல் பஸ்ரி சுலைமான் கூறினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தங்களுக்கு காலை 9.45 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து சம்மபவ இடத்திற்கு தீயணைப்பு துறை உறுப்பினர்கள் வந்தபோது, ’ ஒரு இரட்டை மாடி வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது .
“அவ்வீட்டில் வசித்துவந்த 28 வயதான கணவருக்கு கால்களில் காயங்கள் ஏற்பட்டன, அதே நேரத்தில் அவரது 34 வயது மனைவி மற்றும் நான்கு வயது மகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டிருந்தது. அவர்களை வீட்டை விட்டு வெளியே மீட்டு கொண்டு வர முடிந்தது, மேலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டோம்,” என்று அவர் கூறினார்.
தீயணைப்பு குழுவினரால் தீயை முழுமையாக அணைக்க முடிந்ததாகவும், பிற்பகல் 1.30 மணிக்கு நடவடிக்கை முடிந்ததாகவும் கைருல் கூறினார்.