மலேசிய இந்து சங்கத்தின் 41ஆவது ஆண்டு பொதுகூட்டம் வரும் 16.4.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் ஸ்தாப்பாக், ஆயர் பானாஸ் ஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் என்று விலாயா மாநில தலைவி பாலாமணி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
அனைத்து கூட்டரசுப் பிரதேச இந்து சங்க உறுப்பினர்களும் இந்த 41ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து சங்கத்தின் வளர்ச்சிக்கு சிறந்த ஆலோசனையை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். ஒற்றுமையே நமது பலம் என்பதனை சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்து சங்கத்தின் தேசியத்தலைவர் சங்கபூஷண் கணேசன் தங்கவேலு மாநில ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு வருகை தந்து தலைமையுரை ஆற்றவிருக்கிறார் என்று மாநிலத் தலைவர் கூறினார்.
உறுப்பினர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று ஆண்டுக்கூட்டத்தில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.