ஈப்போவின் மாஞ்சாங் மற்றும் பேராக் தெங்கா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நீர் விநியோகப் பிரச்சினை நாளை திங்கட்கிழமை காலைக்குள் தீர்க்கப்படும் என்று பேராக் நீர் வாரியம் எதிர்பார்க்கிறது.
அதன் பொது மேலாளர் டத்தோ இஷாக் அப்துல் ரஹ்மான் கூறுகையில், தமது வாரியம் புதிய குழாய்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், நாளை அதிகாலை 4 முதல் 6 மணிக்குள் அப்பணி முழுவதும் முடிக்கப்படும் என்றும், குடியிருப்பாளர்கள் படிப்படியாக நீர் விநியோகத்தைப் பெறுவார்கள் என்றும் கூறினார்.