கால்பந்து போட்டிக்குப் பிறகு கலவரத்தில் ஈடுபட்ட மூவர் கைது

ஜார்ஜ் டவுன்: பினாங்கு எஃப்சி மற்றும் பேராக் எப்சி அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிக்குப் பிறகு சிட்டி ஸ்டேடியத்திற்கு வெளியே கடந்த வெள்ளிக்கிழமை  கலவரத்தில் ஈடுபட்டதாக  மூன்று மலேசிய ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏப்ரல் 1 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் நடந்த சம்பவத்தில் 20 முதல் 23 வயதுக்குட்பட்ட ஆண்கள், போதைப்பொருள் எதிர்மறையான சோதனையில் ஈடுபட்டதாக திமூர் லாவுட் மாவட்ட காவல்துறைத் தலைவர் சோஃபியன் சாண்டோங் கூறினார்.

அவர்கள் அனைவரும் விசாரணைக்குப் பிறகு போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களை போலீசார் இன்னும் தேடி வருகின்றனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கலவரம் தொடர்பாக குற்றவியல் சட்டம் 147வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். முகநூலில் நேற்று பதிவேற்றப்பட்ட 31 வினாடிகள் கொண்ட வீடியோவில் கால்பந்து ரசிகர்கள் குழு கலந்து கொண்ட கலவரம் வைரலானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here