PN நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்

 கோலாலம்பூர்: இலக்கு வைக்கப்பட்ட ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) திரும்பப் பெறும் திட்டம் மீதான விவாதத்திற்கான கோரிக்கைகள் தோல்வியடைந்ததை அடுத்து, பெரிகாத்தான் நேஷனல்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வான் அஹ்மத் பைசல் வான் அஹ்மத் கமால் (PN- மாச்சாங்) கடந்த வெள்ளிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வ பிரேரணையை சமர்ப்பித்த நிலையில், இந்த விவகாரத்தில் அவசரப் பிரேரணை ஒன்றைப் பரிசீலிக்கக் கோரினார்.

ஷாஹிதான் காசிம் (PN-Arau) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் Hamzah Zainudin (PN-Larut) ஆகியோர் வான் ஃபைசலுக்கு ஆதரவாக நின்று, இந்த விஷயம் மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று வலியுறுத்தினார்கள்.

எழுத்துப்பூர்வ பிரேரணைகளுக்கு பதிலளிக்க சபாநாயகர் வழக்கமாக ஐந்து நாட்கள் எடுத்துக் கொள்வார் என்றும், இந்த அமர்விற்கான மக்களவை கடைசி நாள் நடவடிக்கைகள் நாளை என்றும் ஷாஹிதான் காசிம் கூறினார்.

இந்த விவகாரம் விவாதிக்கப்படாவிட்டால், நாங்கள் (PN- MPகள்) எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வோம் என்று ஹம்சா கூறினார். அப்போது மக்களவை துணை சபாநாயகர் அலிஸ் லாவ், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களவையை விட்டு வெளியேற சுதந்திரம் உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here