இன்று அதிகாலை ஜார்ஜ் டவுன், துன் டாக்டர் லிம் சோங் யூ நெடுஞ்சாலையின் 1.5ஆவது கிலோமீட்டரில், கார் ஒன்று லோரியின் பின்புறத்தில் மோதியதில் 44 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.
அதிகாலை 4.19 மணியளவில் நடந்த இந்த விபத்தில், ஓட்டுநர் இருக்கையில் சிக்கி எஸ்.வித்ரா ஸ்டீவன் என்ற ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாக ஜாலான் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டு அதிகாரி, இஸ்ரஹானாபி இஸ்மாயில் தெரிவித்தார்.
“சம்பவம் நடந்த இடத்திற்கு தீயணைப்புப் படை வந்தபோது, ஒரு லோரியின் பின்புறத்தில் புரோத்தோன் வாஜா ரக கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது மற்றும் காரின் ஓட்டுநர் பக்க இருக்கையில் கார் ஓட்டுநர் சிக்கி பலியானது கண்டறியப்பட்டது” என்றார்.

அவரது கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் அதிகாலை 4.51 மணிக்கு வெற்றிகரமாக காரிலிருந்து அகற்றப்பட்டார், ஆனால் அங்கிருந்த சுகாதார அமைச்சகத்தின் மருத்துவக் குழுவால் அவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
“பாதிக்கப்பட்டவரின் சடலம் மேலதிக நடவடிக்கைக்காக போலீசைரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் கூறினார்.









