இரப்பர் தோட்டத்தில் போதைப்பொருள் விநியோகம் செய்ததாக இருவர் மீது குற்றச்சாட்டு

கடந்த மாத இறுதியில் இங்குள்ள ஃபெல்டா ஜெலாய் 4, கெமாஸில் உள்ள இரப்பர் தோட்டத்தில் போதைப்பொருள் விநியோகித்ததாக இரு ஆடவர்கள் மீது இன்று கெமாஸ் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட 39 வயதுடைய முகமட் இக்மல் ஹப்ஷாம் முஹமட் ஷுகோர் மற்றும் சுல்ஹிஸ்யாம் ஜைனல் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டு, நீதிபதி கர்தினி கஸ்ரன் முன்னிலையில் வாசிக்கப்பட்டவுடன் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறி, இருவரும் விசாரணை கோரினர்.

ஒன்றாகப் படிக்கப்பட்ட முதல் குற்றச்சாட்டின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் 300 கிராம் எடையுள்ள ஹெரோயின் வகை போதைப்பொருட்களை விநியோகித்ததாகக் கண்டறியப்பட்டது.

இரண்டாவது குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, அவர்கள் இருவரும் 50 கிராம் எடையுள்ள சியாபுவை விநியோகித்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு குற்றங்களும் அவர்களால் மார்ச் 31 அன்று ஃபெல்டா ஜெலாய் 4, கெமாஸில் உள்ள ஒரு இரப்பர் தோட்டத்தில் காலை 10.30 மணியளவில் செய்யப்பட்டன.

அனைத்து குற்றங்களும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B (1)(a) இன் படி குற்றம் சாட்டப்படுகின்றன, மேலும் அதே சட்டத்தின் பிரிவு 39B (2) இன் படி மரண தண்டனை விதிக்கப்படலாம்.
தற்போது மரண தண்டனை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஆயுள் தண்டனையும்,15க்கு குறையாத பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை, இராசாயன அறிக்கையை சமர்ப்பிக்க மே 25 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here