கெரிக் அருகே உள்ள பெலும் வனப் பகுதியில் பணியில் இருந்த இராணுவ வீரர் ஒருவர், கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி முதல் காணாமல் போனதாக புகார் கிடைத்துள்ளதாக, பேராக் காவல்துறைத் தலைவர், டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி கூறினார்.
33 வயதான அந்த சிப்பாய் தேசிய இராணுவப் படைப்பிரிவின் 25 வது பட்டாலியன், ஸ்ரீ பென்டாங் இராணுவ முகாம், பகாங்கைச் சேர்ந்தவர் என்றும், அவர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட முதல் நாளிலிருந்து தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை குறித்த சிப்பாய் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
“ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 5 மணியளவில், பாதிக்கப்பட்டவர் மற்றும் ஐந்து இராணுவ உறுப்பினர்களுடன் வனப்பகுதியில் ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, காணாமல் போனதாக முதற்கட்ட போலீஸ் விசாரணையின் முடிவுகளில் கண்டறியப்பட்டன.
“காணாமல் போன சிப்பாயைக் கண்டுபிடிக்க மலேசிய ஆயுதப் படைகளால் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.