லோரி மீது மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மூவர் பலி

போக்கோக் சேனாவிற்கு அருகிலுள்ள தஞ்சோங் மூசாங்கில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே, நேற்று இரவு லோரியின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில், மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர், மற்றொருவர் படுகாயமடைந்தார்.

விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் 19 முதல் 23 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்று கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அஹ்மட் ஷுக்ரி மாட் அகிர் கூறினார்.

அவர்கள் தலை மற்றும் உடலில் பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றும் 14 வயது சிறுவன் காயமடைந்தார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இரவு 10.50 மணியளவில் நான்கு மோட்டார் சைக்கிள்களும் ஒரு லோரியும் மோதி விபத்துக்குள்ளானதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிள்களும் லோரியும் ஒரே திசையில் பயணித்ததாகவும், அலோர் ஸ்டாரில் இருந்து ஜாபி, போக்கோக் சேனா நோக்கிச் சென்றபோது, 56 வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற லோரியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் உட்பட காயமடைந்தவரும் சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here