பெண்டாங்கிலுள்ள குபுர் பஞ்சாங்கின் கம்போங் செனாராவில் உள்ள தனது வீட்டின் முன், நேற்றிரவு சிறுமி ஒருவர் பட்டாசு வெடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது அவரின் உடலில் தீக்காயம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
கடந்த செவ்வாய்கிழமை இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது, இதனால் பாதிக்கப்பட்ட நூர் ஜாடில் ஹிடாயா முகமட் தர்மிசி, 4, அவரது உடலில் கிட்டத்தட்ட 46 விழுக்காடு தீயில் எரிந்துள்ளதாக, பெண்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணைக் கண்காணிப்பாளர் அரிஸ் ஷாம் ஹமேசா கூறினார்.
நேற்று அதிகாலை 2.45 மணிக்கு மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு சம்பவம் தொடர்பான அறிக்கை கிடைக்கப் பெற்றதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது 7 மற்றும் 10 வயதுடைய இரண்டு சகோதரர்களும் தங்கள் வீட்டின் முன் பட்டாசு வெடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
“அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
“இருப்பினும், கணவனும் மனைவியும் திடீரென்று தங்கள் பிள்ளையின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடினர், அவர்களின் இரண்டு மகன்களும் சிறுமியின் உடலை எரித்த தீயை அணைக்க முயற்சிப்பதைக் கண்டதாகவும், பின்னர் பாதிக்கப்பட்டவரின் தந்தை, ஒரு வாளி தண்ணீரை எடுத்து தனது மகளின் உடலில் ஊற்றியதாகவும் அரிஸ் ஷாம் கூறினார்.
பட்டாசு கொளுத்த முற்பட்ட போது மண்ணெண்ணெய் விளக்கில் தீ வைத்து எரிக்கப்பட்டதில் தனது மகள் தீப்பிடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூறியதாகவும், போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.