பெங்கலான் சேப்பா சுகாதார நிலையத்தில் நள்ளிரவு 12.26 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், கட்டிடத்தின் 80 விழுக்காடு தீயில் எரிந்து நாசமானது என்று பெங்கலான் சேப்பா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய தலைவர், மூத்த துணை தீயணைப்பு கண்காணிப்பாளர் ஆலாம் நசுத் இலியாஸ் தெரிவித்தார்.
தகவல் கிடைக்கப்பெற்றதும், நள்ளிரவு 12.33 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் குழு அந்த இடத்திற்கு வந்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அறை மற்றும் கிளினிக்கில் மூன்று வெளிநோயாளர் பரிசோதனை அறைகள் ஆகியன தீயில் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டதாக அவர் கூறினார்.
இந்த நடவடிக்கையில் சேப்பா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தினருடன் கோத்தா பாருவின் தீயணைப்பு நிலையத்தினரும் உதவியதுடன், மொத்தம் 17 தீயணைப்பு வீரர்கள் வேகமாக செயற்பட்டு அதிகாலை 2.18 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர், ”என்று கூறினார்.
இச்சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.