பாச்சோக்கின் முக்கிம் பெரிஸ் லாலாங்கில் கரி மண் தீயைக் கண்காணிக்க கிளாந்தான் சுற்றுச்சூழல் துறை ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துகிறது என்று, அதன் இயக்குனர் வான் அமினோர்டின் வான் கமாருடின் தெரிவித்தார்.
கிளாந்தான் சுற்றுச்சூழல் துறை, கிளாந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உள்ளிட்ட பிற நிறுவனங்களுடன் இணைந்து, மாநிலம் முழுவதும், குறிப்பாக முக்கிம் பெரிஸ் லாலாங்கின் கரிமண் தீ ஏற்பட்டுள்ள பகுதியிலுள்ள காற்றின் தற்போதைய நிலையை தொடர்ந்து கண்காணிக்கிறது என்றார்.
மேலும் அப்பகுதிகளில் ட்ரோன்களை பயன்படுத்தி வான்வழி கண்காணிப்பை மேற்கொள்வது தவிர, கடந்த இரண்டு வாரங்களாக ஒவ்வொரு நாளும் அங்கு ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன,” என்று அவர் கூறினார்.