எம்ஆர்டி சேவை முகப்பிடத்தில் இருந்து திருட முயன்ற துரைராஜனுக்கு 2 மாத சிறை

கோலாலம்பூர்: Muzium Negara Mass Rapid Transit  (எம்ஆர்டி) நிலைய வாடிக்கையாளர் சேவை கவுண்டரில் பணத்தை திருட முயற்சித்ததற்காக வேலையில்லாத ஒருவருக்கு  மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இரண்டு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (ஜன 16) நள்ளிரவு 12.20 மணியளவில் அப்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட பி.துரைராஜன் (35) என்பவருக்கு மாஜிஸ்திரேட் ஐனா அசாஹ்ரா ஆரிஃபின் தண்டனை விதித்தார்.

ஜனவரி 16ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாள் முதல் சிறைத் தண்டனையை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. துரைராஜன் மீது குற்றவியல் சட்டத்தின் 447ஆவது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இது அதிகபட்சமாக ஆறு மாத சிறைத்தண்டனை 3,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

வழக்கு உண்மைகளின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கவுண்டரில் உள்ள பணப்பதிவு இயந்திரத்தை உடைக்க முயன்றார். இருப்பினும், பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார் மற்றும் இழப்புகள் எதுவும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here