52 வயது பெண் ஒருவரைத் தாக்கி பாலத்தின் கீழ் வீசிய ஐவர் கைது

ஒரு 52 பெண்ணைத் தாக்கி, வெட்டிக் காயப்படுத்தி சிலாங்கூரின் கம்போங் சாவா பந்திங் பாலத்தின் கீழ் அவரை வீசி எறிந்ததாக ஒரு நம்பப்படும் ஐந்து ஆண்களை போலீசார் கைது செய்தனர்.

கடந்த வியாழன் அன்று அதிகாலை 3.25 மணியளவில், பாலத்தின் அடியில் இருந்து உதவி கேட்டு வந்த சத்தம் குறித்து பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கோலா லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர், அஹ்மட் ரித்வான் முகமட் நோர் சாலே தெரிவித்தார்.

உள்ளூர் வங்கியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்த பாதிக்கப்பட்ட பெண், குறித்த பாலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பொதுமக்களால் மீட்கப்பட்டார்.

“பாதிக்கப்பட்டவர் மற்றும் சந்தேக நபர்கள் ஆகியோர் குடியிருக்கும் வாடகை வீட்டிற்குள் போதைப்பொருள் உட்கொள்வதைத் தவிர, தொடர்ந்து மது அருந்தியதுடன் சந்தேக நபர்கள் எப்போதும் சத்தம் எழுப்புவதால், சந்தேக நபர்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் பிரச்சினை தொடங்கியதாக நம்பப்படுகிறது.

சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவரை கரும்பினால் தாக்கி காயப்படுத்தியதாகவும், மற்றும் கூர்மையான பொருளால் வெட்டிக் காயங்கள் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் பாலத்தின் அடியில் அவர் தூக்கி வீசப்பட்டதாகவும் அஹ்மட் ரித்வான் கூறினார்.

30 வயதிற்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் போதைப்பொருள் சம்மந்தப்பட்ட முந்தைய குற்றப் பதிவுகளை கொண்டுள்ளனர். அத்தோடு அனைத்து சந்தேக நபர்களும் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here