சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி பலி

பொந்தியான் கம்போங் பெனெரோக், ஜாலான் பெனெரோக் என்ற இடத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) இரவு 9.56 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. பொந்தியான் பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து 11 தீயணைப்பு வீரர்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

ஒரு தீயணைப்பு மீட்பு டெண்டர் மற்றும் ஒரு அவசர மருத்துவ மறுமொழி சேவைகள் (EMRS) வாகனம் இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டது பொன்டியன் பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் மகாதீர் மாமட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் 55 வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற பைக், புரோட்டான் ஈஸ்வாரா கார் மற்றும் மிட்சுபிஷி கார் ஆகியவை சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத் துறையின் மருத்துவக் குழுவால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இறந்துவிட்டதாக அறிவித்தார்,” என்று மகாதிர் கூறினார்.

காருக்குள் சிக்கி காயமடைந்த 70 வயதுடைய புரோட்டான் ஈஸ்வராவின் சாரதியும் பயணியும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

மிட்சுபிஷி காரில் இருந்த ஒரு ஆணும் பெண்ணும் சிறு காயங்களுக்கு ஆளானதாகவும், அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் அருகில் உள்ள கிளினிக்கிற்கு அனுப்பி வைத்ததாகவும் மகாதீர் கூறினார். இரவு 11.13 மணிக்கு மீட்பு பணி நிறைவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here