இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் கொண்டாட்ட காலங்களில் முட்டை விநியோகம் போதுமானதாக இருக்கும் என்று நம்புவதாக கால்நடை மருத்துவ சேவைகள் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் மாதத்திற்கு சராசரியாக 942 மில்லியன் முட்டைகள் என்ற நுகர்வு விகிதத்தைக் கொண்டுள்ளதாகவும், ஆனால் பண்டிகைக் காலத்தில் முடடைக்கான தேவை அதிகரிக்கும் என்பதால், அதன் விநியோகம் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, முட்டை விநியோகத்தின் நிலையை கால்நடை மருத்துவ சேவைகள் துறை அவ்வப்போது கண்காணிப்பை மேற்கொள்வதாக, அது இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.