திரெங்கானு, கிளாந்தான் ஆகியவற்றுடன் கல்வி, சுற்றுலாத் தொடர்புகளை மேம்படுத்த சிங்கப்பூர் விருப்பம்

சிங்­கப்­பூர், மலே­சி­யா­வின் கூட்டரசு அர­சாங்­கத்­துக்கு அப்­பால் மாநில அரசாங்கங்­க­ளு­ட­னும் தொடர்­பு­களை மேம்­ப­டுத்­த விரும்­பு­வ­தாக சிங்கப்பூர் வெளி­யு­றவு இரண்­டாம் அமைச்­சர் மாலிக்கி ஒஸ்­மான் தெரிவித்துள்ளார்.

அதாவது எல்லை தாண்­டிய ஒத்­து­ழைப்பு, சுற்­றுலா , கல்வி போன்ற அம்­சங்­கள் அவற்றில் அடங்குவதாக அவர் குறிப்­பிட்­டார்.

மலே­சி­யா­வின் வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளான திரெங்­கானு, கிளாந்­தான் ஆகியவற்றுக்கு, இம்­மா­தம் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அவர் மேற்கொண்ட அதி­கா­ரத்­து­வப் பய­ணத்­தின்­போது, அது­கு­றித்­து தாம் கலந்துரையா­டி­ய­தாக மாலிக்கி ஒஸ்­மான் கூறி­னார்.

மேலும் அவ­ரது பய­ணத்­தில், நக­ரத் திட்­ட­மி­டல், வேளாண்மை போன்­றவை குறித்­தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது என்றார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­விற்­கும் இடை­யில் நில­வும் வலு­வான உற­வு­கள் தொட­ரும் என்று கூறிய அவர், அது கோலா­லம்­பூ­ரு­டன் மட்­டு­மன்றி மாநில அரசுக­ளு­ட­னும் தொட­ரும் என்­றார்.

திரெங்­கானு, கிளாந்­தான் இரு மாநி­லங்­க­ளுக்­கும் சிங்­கப்­பூ­ரில் சுற்­றுப்­ப­யண அலு­வ­ல­கம் அமைக்க தாம் அழைப்பு விடுத்­துள்­ள­தாக டாக்­டர் மாலிக்கி கூறினார். சுற்­றுலாத் துறை­யில் ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்த இரு மாநி­லத் தலை­வர்­களும் ஒப்­புக்­கொண்­ட­தாக அவர் சொன்­னார்.

உள்­கட்­ட­மைப்பு மேம்­பாடு, நீர் ஒதுக்­கீடு போன்­றவை தொடர்­பில் சிங்­கப்­பூர் அதன் தொழில்நுட்ப அறிவை இரு மாநி­லங்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்­ளும் எனக் கூறப்­பட்­டது.

கல்­விக்­கான இரண்­டாம் அமைச்­ச­ரு­மான டாக்­டர் மாலிக்கி, இரு நாட்­டுக் கல்வித்­து­றை­களும் இளை­யர்­கள் அணுக்­க­மா­கப் பணி­யாற்ற வாய்ப்­பு­க­ளைத் தொடர்ந்து உரு­வாக்­கும் என்­றும் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here