போலி லாட்டரி சீட்டை நம்பி 70,000 ரிங்கிட்டை இழந்த மாது

’பொந்தியான் தபால் நிலையத்தில் சில பில்களை செலுத்தச் சென்ற மூத்த குடிமகன் ஒரு போலி லாட்டரி மோசடியில் தனது வாழ்நாள் சேமிப்பான RM70,000 க்கு மேல் ஏமாற்றப்பட்டார்.

60 வயதுடைய அந்த பெண், வேறொரு நபருடன் பேசிக் கொண்டிருந்தபோது இந்தோனேசிய நபர் ஒருவர் அவர்களை அணுகி, தன்னிடம் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள லாட்டரி சீட்டு இருப்பதாகக் கூறினார்.

வெளிநாட்டவர், அடையாள அட்டையுடன் உள்ளூர்காரர் இல்லாததால், தன்னால் பணத்தைப் பெற முடியவில்லை என்று கூறினார். அந்த வெளிநாட்டவர் வங்கி நெகாராவில் புதிய வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்றும் பணத்தை மீட்டெடுப்பதற்கு ரிம80,000 வைப்புத் தொகையைக் காட்ட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ஆரம்பத்தில், அந்தப் பெண் நம்பவில்லை.ஆனால் வெளிநாட்டவர் அவருக்கு டோக்கனாக RM50,000 கொடுக்க முன்வந்ததால் அவர் உதவ முடிவு செய்தார். மேலும் அவரது பெயரில் அனைத்து வங்கிக் கணக்குகளும் திறக்கப்படும் என்றும் டெபாசிட் பாதுகாப்பாக இருக்கும் என்றும் உறுதி அளித்தார்.

சந்தேக நபர், மற்றொரு நபருடன் சேர்ந்து, கிட்டத்தட்ட RM70,000 எடுக்க இரண்டு வங்கிகளுக்கு அந்தப் பெண்ணை அழைத்து சென்றனர். இருப்பினும், அந்தப் பெண் தனது அடையாள அட்டையை நகலெடுக்கச் சென்றபோது, ​​சந்தேக நபர்கள் பணத்துடன் தப்பிச் சென்றுள்ளனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து  மேலும் புகார் அளிக்கப்பட்டது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here