தாப்பா இளைப்பாறும் பகுதியில் தவறுதலாக கைவிடப்பட்ட பதின்ம வயது சிறுவன் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தார்

தாப்பா வடக்கு நெடுஞ்சாலையின் இளைப்பாறும் பகுதியில் தற்செயலாக கைவிடப்பட்ட 15 வயது சிறுவன் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) மாலை 6.45 மணியளவில், நெடுஞ்சாலையின் இளைப்பாறும் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், ஒரு சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாக தாப்பா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் வான் அசாருதீன் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

“ஹரி ராயா ஐடில்ஃபிட்ரி ஓப்ஸ் செலாமாட் 20 ரோந்துப் பணியில் இருந்தபோது, அந்தப் பகுதியில் உள்ள போலீசார் அந்தச் சிறுவனை தனியாகக் கண்டனர். அதன் பின்னர் அவரது தந்தையைத் தொடர்பு கொண்டு, சிறுவனை குடும்பத்துடன் சேர்த்து வைத்ததாக” வான் அசாருதீன் கூறினார்.

பெற்றோர்கள் விழிப்புடன் இருக்கவும், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை எப்போதும் உறுதிப்படுத்தவும் அவர் நினைவூட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here