சமீபத்தில் பெட்டாலிங் ஜெயாவின் சுங்கை வேயில் உள்ள அவரது வீட்டில் மூன்று மாத பெண் குழந்தை இறந்ததை அடுத்து, 31 வயது குழந்தை பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் நடந்த மே 9 அன்று பிற்பகல் 3.56 மணிக்கு, குழந்தையின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இரண்டு மணி நேரத்திற்குள் சந்தேக நபர் வீட்டில் கைது செய்யப்பட்டார் என்று, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீட் இன்று திங்கட்கிழமை (மே 22) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இவ்வழக்கு குழந்தைச் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் அலட்சியத்திற்காக வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
“விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன, சந்தேக நபர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்,” என்றும், சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை அல்லது பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 03-79662222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.