அரசர் சார்லஸ் III முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள பேரரசர் தம்பதியர் லண்டன் பயணம்

மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பேரரசியார் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் அரசர் சார்லஸ் III முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளவதற்காக, இன்று முதல் மே 14 வரை ஐக்கிய இராச்சியத்தின் லண்டனுக்கு சிறப்புப் பயணம் மேற்கொள்கின்றனர்.

மே 6 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள மன்னர் சார்லஸ் III அவர்களின் அழைப்பின் பேரில், இந்த பயணம் அமைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா) தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here