மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் நாட்டிலுள்ள அனைத்து பௌத்தர்களுக்கும் வெசாக் தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
வாழ்த்து தொடர்பான பதிவு இன்று வியாழன் (மே 4) அன்று இஸ்தானா நெகாராவின் முகநூலில் பதிவேற்றப்பட்டுள்ளது.
“இந்தப் பண்டிகை அனைத்து பௌத்தர்களுக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும்” என்று மாண்புமிகு பேரரசர் தம்பதியினர் வாழ்த்தியுள்ளனர்.
வெசாக் தினமானது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் இறப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் பௌத்தர்களால் கொண்டாடப்படுகிறது.