நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக கூடுதலாக RM1.27 பில்லியன் ஒதுக்கீட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்இன்று அறிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 7) ஃபாரஸ்ட் ஹைட்ஸில் உள்ள விஸ்மா மஜ்லிஸ் பண்டாரயா சிரம்பானில் நடந்த நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் மலேசியா மடானி நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் உரையாற்றியபோது பிரதமர் இதனை அறிவித்தார்.
இந்த நிகழ்வில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு அமைச்சருமான டத்தோஸ்ரீ முகமட் ஹசன் மற்றும் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன் ஆகியோரும் உடனிருந்தனர்.