போர்ட்டிக்சனிலுள்ள ஒரு வீட்டில் 67 வயது மூதாட்டியின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அவரது மரணத்தில் எந்தக் குற்றவியல் கூறுகளும் இல்லை என்றும், இதனை திடீர் மரணம் என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளனர் என்றும் போர்ட்டிக்சன் காவல்துறை துணைத் தலைவர் ஐடி ஷாம் முகமட் தெரிவித்தார்.
“இது குறித்து பொதுமக்கள் மேலும் ஊகிக்க மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
தெலுக் கெமாங்கில் உள்ள ஜாலான் பந்தாய், பத்து 8 இல் தனியாக வசித்து வந்த அந்த மூதாட்டிக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான மருத்துவ குறிப்புக்கள் உள்ளது என்று ஐடி ஷாம் கூறினார்.