மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் மலேசியாவில் உள்ள கல்வியாளர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை (மே 16) இஸ்தானா நெகாராவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு “Guru Insani Pemangkin Generasi Madani என்று சுலோகத்துடன் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.









