ஈப்போ: பேராக் ஸ்டேடியத்தில் நேற்றிரவு பேராக் எஃப்சி மற்றும் சிலாங்கூர் எஃப்சி அணிகளின் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த சண்டையில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி யஹாயா ஹாசன் கூறுகையில், 18 முதல் 26 வயதுடைய சந்தேக நபர்கள், கலவரத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 147ஆவது பிரிவின் கீழ் விசாரணைக்காக இன்று விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு 9.17 மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றதாகவும், மைதானத்தில் கடமையாற்றிய போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த சம்பவத்தின் வீடியோவும் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
சந்தேக நபர்களில் ஒருவர் TFC என்ற போதைப்பொருள் (கஞ்சா) உட்கொண்டிருந்தது சோதனையில் தெரிய வந்தது என்று அவர் மேலும் கூறினார். சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ மூத்த விசாரணை அதிகாரி ASP Chua Sze Yuan ஐ 012-6195312 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
ஸ்டேடியத்தில் நடந்த சூப்பர் லீக் போட்டி போட்டி ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் சிதைந்ததாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.








