போதைப்பொருள் வழக்கில் கைதான வாலிபருக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்றியது சிங்கப்பூர்

போதைப்பொருள் கடத்தல் என்பது சில நாடுகளில் மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. அதில் சிங்கப்பூரும் ஒன்றாகும். அங்கு 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்தினால் மரண தண்டனை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 1.5 கிலோ கஞ்சா கடத்திய 35 வயது வாலிபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தூக்கு தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி அவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அதனை சிங்கப்பூர் கோர்ட்டு நிராகரித்தது. இதனையடுத்து அந்த வாலிபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதேபோல் கடந்த மாதம் 26ஆம் தேதி சிங்கப்பூரியரான சுப்பையா என்பவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில் ஒரு மாதத்துக்குள் அங்கு மற்றொரு வாலிபர் தூக்கிலிடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here