அமானா துணைத் தலைவரை செனட்டராக நியமித்தது பேராக் மாநில சட்டமன்றம்

இன்று வியாழன் (மே 25) நடந்த பேராக் மாநில சட்டமன்றக் கூட்டத்தில், டத்தோஸ்ரீ டாக்டர் முஜாஹிட் யூசுப் ராவா செனட்டராக நியமிக்கப்பட்டார்.

15வது பொதுத் தேர்தலில் வேட்பாளராக நின்றபோது, கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி செனட்டர் பதவியை ராஜினாமா செய்த டத்தோ இஸ்கண்டர் துல்கர்னைன் அப்துல் காலிட்க்குப் பதிலாக பார்ட்டி அமானா நெகாராவின் துணைத் தலைவரான அவர் நியமிக்கப்பட்டார்.

இஸ்கண்டர் தற்போதைய கோலா கங்சார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here