தீபகற்ப மலேசியாவின் நான்கு பகுதிகளும் சரவாக்கில் ஒரு பகுதியும் முதல் நிலை வெப்பமான காலநிலையை எதிர்கொள்வதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மலேசிய வானிலை ஆய்வு மையம், இன்று பிற்பகல் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், குறித்த 5 பகுதிகளுக்கு முதல் நிலை வெப்பநிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில் பாசீர் மாஸ் மற்றும் கோலக்கிராய், கிளாந்தான், ரவூப் மற்றும் பெந்தோங், பஹாங் ஆகிய நான்கு இடங்களும், சரவாக்கில் உள்ள செலாங்காவ் என்ற 5 பகுதிகளும் இந்த வானிலையை அனுபவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எச்சரிக்கை நிலை குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு அதிகபட்ச தினசரி வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்” என்று அது தெரிவித்துள்ளது.