கால்வாயில் கார் விழுந்தது; தாயார் மரணம்- மகன் காயம்

கோத்தா திங்கி, ஜாலான் ஸ்ரீ பெரானி-லாங் ஹெங்கில் நடந்த விபத்தில் தாயாரும் அவரது மகனும் விபத்தில் சிக்கி தாயார் உயிரிழந்தார். கோத்தா திங்கி OCPD துணைத் தலைவர் ஹுசின் ஜமோரா கூறுகையில் 29 வயதான ஓட்டுநர் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் சறுக்கி சாக்கடையில் விழுந்ததால் இந்த விபத்து நடந்ததாக நம்பப்படுகிறது.

காரில் இருந்த 64 வயது பயணியான ஓட்டுநரின் தாயார், பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (மே 28) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஓட்டுநரின் முழங்கையில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

சாலையில் செல்லும்போது கவனமாக இருக்குமாறு பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மேலும் அனைத்து சாலை விதிமுறைகளையும் எப்போதும் கடைபிடிக்குமாறும்  அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here