லாபுவானில் Pulau Enoe பிரதான நீர்க்குழாயில் ஏற்பட்ட சேதம் காரணமாக லாபுவானில் மீண்டும் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள 18,000 நீர் கணக்கு பயனர்களை உட்படுத்திய சுமார் 60,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை (ஜூன் 5) இரவு 7.30 மணி முதல் 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் திட்டமிடப்படாத நீர் விநியோகத்தடை ஏற்பட்டதாக லாபுவான் நீர் வழங்கல் பிரிவு, இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரதான நீர்க்குழாய் சேதத்தின் விளைவாக பூலாவ் ஈனோ பிரதான விநியோக தொட்டியின் செயல்பாடு அது முழுமையாக சரிசெய்யப்படும் வரை இடைநிறுத்தப்படும் என்றும் அது கூறியது.
இருப்பினும் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் டேங்கர்களை அனுப்புவதாகவும் அவ்வறிக்கையில் அது தெரிவித்துள்ளது.