ஜூலை 1ஆம் தேதி முதல் பேங்க் நெகாரா மலேசியாவின் கவர்னராக அப்துல் ரஷீத் கஃபூர் நியமனம்

பேங்க் நெகாரா மலேசியா (BNM) ஜூலை 1, 2023 முதல் ஜூன் 30, 2028 வரை ஐந்தாண்டு காலத்திற்கு டத்தோ ஷேக் அப்துல் ரஷீத் அப்துல் கஃபூரை ஆளுநராக நியமிக்க மாமன்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக  இன்று அறிவித்துள்ளது. ஜூன் 30, 2023 அன்று தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை முடிக்கும் டான்ஸ்ரீ நோர் ஷம்சியா முகமட் யூனுஸிடம் இருந்து அப்துல் ரஷீத் கவர்னர் பதவியை ஏற்பார் என்று BNM ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“கடந்த ஐந்து ஆண்டுகளாக வங்கியை வழிநடத்தியது ஒரு பாக்கியம் மற்றும் மரியாதை. குறிப்பாக தேசத்திற்கு இது போன்ற கொந்தளிப்பான மற்றும் நெருக்கடியான காலகட்டத்தில் வங்கியை நாட்டுக்கு சேவையில் வழிநடத்தும் வாய்ப்புக்கு நான் நன்றி கூறுகிறேன்.

பல வருடங்களாக அவருடன் நெருக்கமாகப் பணியாற்றிய ரஷீத் தான் கவர்னராக வங்கியை வழிநடத்த சரியான நபர் என்று நான் நம்புகிறேன். மலேசியப் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சிக்கு உகந்த பணவியல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதற்காக வங்கியை வழிநடத்தும் மற்றும் வங்கியின் ஆணையைத் தொடர்ந்து வழங்குவதற்கான அவரது திறமையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று நோர் ஷம்சியா கூறினார்.

வங்கிக்கும் நாட்டிற்கும் நோர் ஷம்சியாவின் பங்களிப்புகள் மற்றும் சேவைக்காக BNM வாரியம் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. வாரியத்தின் கவர்னர் மற்றும் தலைவர் என்ற பொறுப்பை நிறைவேற்றுவதில் நோர் ஷம்சியா முன்மாதிரியான தலைமைத்துவத்தையும் விதிவிலக்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியதாக வாரியம் கூறியது.

வங்கியில் அப்துல் ரஷீத்தின் விரிவான அனுபவம் மற்றும் நிரூபிக்கப்பட்ட சாதனை மூலம், அவர் வங்கியை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வார் மற்றும் நாட்டின் நலன்களை முன்னேற்றுவதில் அதன் சிறந்த பாரம்பரியத்தை தொடர்வார் என்றும் வாரியம் நம்பிக்கை கொண்டுள்ளது.

அப்துல் ரஷீத் 1988 இல் மத்திய வங்கியில் சேர்ந்தார். 2016 இல் துணை ஆளுநராக உயர்ந்தார். அவர் மலாயா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் Saïd Business Schoolஇல் MBA பட்டமும் பெற்றுள்ளார்.

வங்கியில் பணிபுரிந்த காலத்தில் அப்துல் ரஷீத் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். அவர் தற்போது பணவியல் கொள்கைக் குழு மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக் குழுவின் உறுப்பினராக உள்ளார். அவர் 2015 முதல் அப்பதவியை வகித்து வருகிறார். நிதித் துறை திட்டம் மற்றும் நிதித் துறை புளூபிரிண்ட்களை மேம்படுத்துவதிலும் செயல்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here