காஜாங்கின் செமினியில் உள்ள ஜாலான் கம்போங் சுங்கை லாலாங்கில் இன்று இரு கார்கள் மோதியதில் ஒரு 30 வயது ஆடவர் காயமடைந்த நிலையில் காயமின்றி கர்ப்பிணிப் பெண் உயிர் பிழைத்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் காலை 7.02 மணிக்கு, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் செயல்பாட்டு மையத்திற்கு விபத்து தொடர்பான அழைப்பு வந்தது என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைச் செயல்பாட்டு மையத்தின் துணை இயக்குநர், முகமதுல் எஹ்சான் முகமட் ஜைன் கூறினார்.
உடனே செமினி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இயந்திரம் அந்த இடத்திற்கு சென்றதாகவும், “எட்டு நிமிடங்களுக்குள் அங்கு வந்தடைந்த குழு வந்து, இரண்டு கார்கள் மோதியதைக் கண்டறிந்தனர்.
காயமடைந்தவர் மேலதிக நடவடிக்கைகளுக்காக மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.